புதுக்கடை அருகேகோவிலில் குத்துவிளக்குகள் திருட்டு

புதுக்கடை அருகேகோவிலில் குத்துவிளக்குகள் திருடப்பட்டது.
புதுக்கடை:
புதுக்கடை அருகே கைசூண்டி பகுதியில் மாடன் சாமி கோவில் உள்ளது. இந்த பகுதியில் எப்போதும் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும். இந்தநிலையில் இரவு கோவிலில் யாரோ மர்ம நபர் நுழைந்து, அங்கு இருந்த 5 குத்துவிளக்குகளை திருடி சென்று விட்டார். அவற்றின் மதிப்பு ரூ.16 ஆயிரத்து 500 ஆகும். இதுபற்றி கோவில் தலைவர் சந்திரகுமார் புதுக்கடை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விளக்குகளை திருடி சென்ற மர்ம நபரை தேடி வருகிறார்கள்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





