செஞ்சி அருகே வீட்டில் நகைகள் திருட்டு


செஞ்சி அருகே வீட்டில் நகைகள் திருட்டு
x

செஞ்சி அருகே வீட்டில் நகைகள் திருடியது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விழுப்புரம்

செஞ்சி,

செஞ்சியை அடுத்த பாலப்பாடியை சேர்ந்தவர் ரங்கநாதன் மனைவி ராஜலெட்சுமி(வயது 39). இவருடைய 2 மகன்கள் சென்னையில் படித்து வருகின்றனர். ரங்கநாதன் இறந்துவிட்டதால், ராஜலட்சுமி மட்டும் தனியாக வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில் ராஜலட்சுமி தனது மகன்களை பார்ப்பதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது வீட்டை பூட்டி விட்டு சென்னைக்கு சென்றார். வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள் நள்ளிரவில் வீட்டின் கதவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்து 2 பவுன் நகையை திருடிச்சென்றுள்ளனர். இதுகுறித்த புகாரின்பேரில் சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story