மளிகை கடையில் பணம் திருட்டு

செஞ்சி மளிகை கடையில் பணம் திருட்டு மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு
விழுப்புரம்
செஞ்சி
செஞ்சி சந்தை மேடு பகுதியில் மளிகை கடை நடத்தி வருபவர் சேகர் மகன் சரவணன்(வயது 37). இவர் சம்பவத்தன்று கடையை பூட்டி கொண்டு வீட்டுக்கு சென்றார். பின்னர் நேற்று காலையில் வந்து பார்த்தபோது கடையில் ஹாலோ பிளாக் கற்களால் கட்டப்பட்டிருந்த சுவற்றை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர் கல்லாவில் இருந்த ரூ.1,000 ரொக்கம் மற்றும் சில்லரை, 3 பூஸ்ட் பாட்டில்கள் ஆகியவற்றை திருடி சென்றது தெரியவந்தது. இது குறித்து சரவணன் கொடுத்த புகாரின் பேரில் செஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து கடையில் புகுந்து பணம் மற்றும் பொருட்களை திருடிச்சென்ற மர்ம நபரை வலைவீசி தேடி வருகிறா்ாகள். இதே கடையில் கடந்த சில தினங்களுக்கு முன்பும் திருட்டு நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story






