டயர் வெடித்து பஞ்சரான அரசு பஸ்சால் பரபரப்பு

சங்கரன்கோவில் அருகே டயர் வெடித்து பஞ்சரான அரசு பஸ்சால் பரபரப்பு ஏற்பட்டது.
சங்கரன்கோவில்:
தென்காசி மாவட்டம் குருக்கள்பட்டியில் இருந்து சங்கரன்கோவிலுக்கு நேற்று மதியம் அரசு பஸ் வந்து கொண்டிருந்தது. இந்த பஸ்ஸில் சுமார் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். அந்த பஸ் குருக்கள்பட்டி அருகே உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு வரும்போது பஸ்சின் இடதுபுறத்தில் முன் பக்க டயர் வெடித்து பஞ்சரானது. இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் சங்கரன்கோவிலுக்கு செல்ல வேண்டிய பயணிகள் செல்ல முடியாமல் அவதிப்பட்டனர். பின்னர் பயணிகள் தாங்களாகவே மற்றொரு பஸ்சில் ஏறி சங்கரன்கோவிலுக்கு சென்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





