தமிழகத்தில் குரங்கம்மை பாதிப்பு இதுவரை இல்லை - அமைச்சர் மா.சுப்பிரமணியன்


தமிழகத்தில் குரங்கம்மை பாதிப்பு இதுவரை இல்லை - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
x

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நேற்றைவிட இன்று குறைவு தான் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

சென்னை,

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

சென்னை ஐஐடியில் கொரோனா பாதிப்பு முழுவதும் இல்லாத நிலை உள்ளது. அண்ணா பல்கலை.யில் 23 பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு லேசான அறிகுறி தான் உள்ளது. கல்வி நிறுவனங்களில் கொரோனா பாதிப்பு முழுவதும் குறைந்து வருகிறது. தமிழகத்தில் குரங்கம்மை பாதிப்பு இதுவரை இல்லை. வெளிநாடுகளில் இருந்து வருபவர்களை கண்காணிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.


Next Story