வீடுபுகுந்து மூதாட்டியை தாக்கி நகை, பணம் கொள்ளை


வீடுபுகுந்து மூதாட்டியை தாக்கி நகை, பணம் கொள்ளை
x

நெமிலியில் மர் நபர்கள் வீடுபுகுந்து மூதாட்டியை தாக்கி நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.

ராணிப்பேட்டை

நெமிலி போலீஸ் ஸ்டேஷன் அருகில் உள்ள நடேசரெட்டி தெருவில் வசித்துவருபவர் பவானி (வயது 61). இவர் தனியார் பள்ளியில் குழந்தைகள் பராமரிப்பு பணியாளராக வேலைபார்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு தன்னுடைய வீட்டில் பவானி தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் வீட்டுக்குள் புகுந்து பவானியை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. பின்பு அவர் அணிந்திருந்த 2 பவுன் நகை, 10 ஆயிரம் ரொக்க பணம் மற்றும் செல்போன் ஆகியவற்றை பறித்து சென்றுள்ளான்.

இது குறித்து நெமிலி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சப்-இன்ஸ்பெக்டர் லோகேஷ் சம்பவம் குறித்து விசாரித்து வருகிறார். போலீஸ் நிலையம் அருகிலேயே மூதாட்டியை தாக்கி நகை, பணத்தை கொள்ளையடித்த இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


Next Story