வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் திருட்டு


வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் திருட்டு
x

வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் திருட்டு

மதுரை

திருமங்கலம்

திருமங்கலம் பாண்டியன் நகர் பகுதியை சேர்ந்தவர் பாண்டி(வயது 70), இவர் சந்தைப்பேட்டை பெத்தண சுவாமி கோவில் பூசாரியாக உள்ளார். இவர் கடந்த 24-ந் தேதி மணப்பாறையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு நேற்று இரவு வீட்டுக்கு வந்தார். வீட்டிற்கு வந்தபோது முன்பக்க கதவு உடைந்து இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 2 மோதிரங்கள் 2½ பவுன் கொள்ளையடிக்கப்பட்டது. மேலும் ரூ.5 ஆயிரம் திருட்டு போயிருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக பாண்டி திருமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில், திருமங்கலம் நகர் போலீசார் மற்றும் மோப்பநாய் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தி உள்ளனர்.


Next Story