திருத்தணி முருகன் கோவிலில் திருக்கல்யாணம்


திருத்தணி முருகன் கோவிலில் திருக்கல்யாணம்
x

திருத்தணி முருகன் கோவிலில் திருக்கல்யாண வைபவம் நடந்தது.

திருவள்ளூர்

திருத்தணி முருகன் கோவிலில் சித்திரை மாத பிரம்மோற்சவ விழா கடந்த மாதம் 25-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் உற்சவ முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன், தினமும் ஓரு வாகனத்தில் காலை, இரவு என இரு வேளைகளில் சிறப்பு அலங்காரத்தில் மாட வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இந்நிலையில் சித்திரை மாத பிரம்மோற்சவ விழாவின் 8-ம் நாளான நேற்று முன்தினம் காலை 9.30 மணிக்கு உற்சவர் முருகப் பெருமான், வள்ளி தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் யாளி வாகனத்தில் எழுந்தருளி மாடவீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு உற்சவர் முருகப்பெருமான் குதிரை வாகனத்தில் வலம் வந்தார். இரவு 9 மணிக்கு உற்சவர் முருகப்பெருமானுக்கும், தெய்வானை அம்மனுக்கும் திருக்கல்யாணம் வைபவம் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு முருகப் பெருமானை வழிபட்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை முருகன் கோவில் துணை ஆணையர் விஜயா மற்றும் கோவில் அதிகாரிகள் ஏற்பாடு செய்திருந்தனர்.


Next Story