மாநில அளவிலான கைப்பந்து போட்டி


மாநில அளவிலான கைப்பந்து போட்டி
x

திட்டச்சேரியில் மாநில அளவிலான கைப்பந்து போட்டி நடந்தது.

நாகப்பட்டினம்

திட்டச்சேரி:

திட்டச்சேரி அரசினர் மேல்நிலைப் பள்ளியில் நாகை மாவட்ட கைப்பந்து கழகம் மற்றும் மன்சூர் கைப்பந்து கழகம் இணைந்து மாநில அளவிலான கைப்பந்து போட்டியை நடத்தியது. போட்டி தொடக்க விழாவிற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் கலாராணி தலைமை தாங்கினார். கலெக்டர் அருண் தம்புராஜ் போட்டியை தொடங்கி வைத்தார். இதில் செங்கல்பட்டு, பொள்ளாச்சி, ஈரோடு, சென்னை, திருச்சி, மயிலாடுதுறை உள்ளிட்ட 6 கல்லூரி அணிகள் கலந்து கொண்டன. நிகழ்ச்சியில் நாகை மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா, மயிலாடுதுறை கைப்பந்து சங்க தலைவர் ராஜ்கமல், மயிலாடுதுறை மாவட்ட கைப்பந்து சங்க செயலாளர் பாபு, தலைவர் செந்தில்குமார், சர்வதேச கைப்பந்து வீரர் முகமது ரியாசுதீன் மற்றும் கைப்பந்து பயிற்சியாளர்கள், விளையாட்டு வீரர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story