வடமாநில தொழிலாளிக்கு கொலை மிரட்டல்


வடமாநில தொழிலாளிக்கு கொலை மிரட்டல்
x

மோகனூர் அருகே வடமாநில தொழிலாளிக்கு கொலை மிரட்டல் விடுத்த புரோக்கரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

நாமக்கல்

மோகனூர்

வடமாநில தொழிலாளி

சத்தீஸ்கார் மாநிலம் நாய்குடா, இகரம்பூர் பகுதியை சேர்ந்தவர் விஜய் ஹவாலா (வயது 27). இவர் மோகனூர் அருகே உள்ள கொளத்துப்பாளையம் தனியார் கோழிப்பண்ணையில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவர் மோகனூர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் சத்தீ்ஸ்கார் மாநிலம் தூர்க் மாவட்டம் அண்டா தாலுகா, ஜீராம் கோனாரி பகுதியை சேர்ந்த புரோக்கர் பிரகாஷ் (45) என்பவர் நாமக்கல் மாவட்டம் மோகனூர் பகுதியில் வசித்து வருகிறார். இவர் வடமாநிலங்களில் இருந்து ஆட்களை அழைத்து வந்து கோழிப்பண்ணை வேலைக்கு அனுப்பும் தொழில் செய்து வருகிறார்.

இந்த நிலையில் விஜய் ஹவாலாவை மோகனூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் கோழிப்பண்ணையில் வேலைக்கு சேர்த்து விட்டு இருந்தார். அந்த கோழிப்பண்ணையில் சம்பளம் ரூ.8 ஆயிரம் பெற்றுகொண்டு எனது தந்தைக்கு அனுப்புவதாக கூறினார். ஒரு மாதம் கழித்து எனது தந்தையிடம் கேட்ட போது பணம் வரவில்லை என கூறினார்.

கொலை மிரட்டல்

இதையடுத்து ஏன் பணம் அனுப்பவில்லை என்று கேட்டபோது உங்களை அழைத்து வந்ததற்கு கமிஷன் யார் கொடுப்பார், என கூறி தரக்குறைவாகவும், தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. இந்த புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கவேல், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தமிழழகன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து புரோக்கர் பிரகாஷை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.


Next Story