கஞ்சா வைத்திருந்த 3 பேர் கைது

நாச்சியார்கோவில் அருகே கஞ்சா வைத்திருந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருவிடைமருதூர்;
கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார்கோவில் போலீஸ் சரக பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி சீனிவாசநல்லூர் அண்ணா நகர் கீழவீதியை சேர்ந்த செல்வமணி மகன் கவுதம்(வயது18), சமத்தனார்குடி மெயின் ரோட்டை சேர்ந்த செல்லதுரை மகன் கிஷோர்குமார்(19), திருப்பந்துறை மாதா கோவில் தெருவை சேர்ந்த அசோக்குமார் மகன் கிறிஸ்டோபர்( 18) ஆகிய 3 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





