வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x

நெல்லையில் வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

திருநெல்வேலி

சேரன்மகாதேவி போலீஸ் நிலைய பகுதியில் அடிதடி மற்றும் கொலை முயற்சி வழக்கில் சேரன்மாதேவி, மூலக்கோவில் தெருவை சேர்ந்த ஆனந்த் என்ற ஆவுடையப்பன் (வயது 29) கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவரால் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படும் என்பதால் இவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன், இன்ஸ்பெக்டர் சேக்அப்துல்காதர் ஆகியோர் கலெக்டருக்கு பரிந்துரை செய்தனர். கலெக்டர் கார்த்திகேயன் இதை ஏற்று ஆனந்தை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதற்கான உத்தரவு பாளையங்கோட்டை சிறை அதிகாரியிடம் நேற்று வழங்கப்பட்டது.


Next Story