வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x

வாலிபர் குண்டர் சட்டத்தில் கைதானார்

திருநெல்வேலி

நெல்லை:

முன்னீர்பள்ளம் தெப்பக்குளத்தெருவை சேர்ந்தவர் அருணாசலம் (வயது 23). இவர் முன்னீர்பள்ளம் போலீஸ் நிலைய பகுதியில் நடந்த கொலை முயற்சி மற்றும் திருட்டு வழக்கில் ஈடுபட்டாதாக கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இவரால் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படும் என்பதால் இவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன், இன்ஸ்பெக்டர் தில்லை நாகராஜன் ஆகியோர் கலெக்டருக்கு பரிந்துரை செய்தனர். இதை கலெக்டர் விஷ்ணு ஏற்று அருணாசலத்தை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து அருணாசலம் குண்டர்சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டதற்கான உத்தரவை பாளையங்கோட்டை சிறை அதிகாரிகளிடம் இன்ஸ்பெக்டர் தில்லை நாகராஜன் வழங்கினார்.

1 More update

Next Story