வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x

நெல்லை அருகே வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

திருநெல்வேலி

நெல்லை அருகே உள்ள மேல தாழையூத்தை சேர்ந்தவர் இசக்கிதுரை என்ற கட்டத்துரை (வயது 22). இவர் தேவர்குளம் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் நடந்த அடிதடி, திருட்டு, கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இவரால் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படும் என்பதால் இவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன், இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் ஆகியோர் கலெக்டருக்கு பரிந்துரை செய்தனர். இதை கலெக்டர் விஷ்ணு ஏற்று இசக்கிதுரையை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதற்கான உத்தரவை பாளையங்கோட்டை சிறை அதிகாரிகளிடம் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் நேற்று வழங்கினார்.


1 More update

Next Story