வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது/

திருநெல்வேலி

நெல்லை மாவட்டம் களக்காடு போலீசார் கடந்த சில நாட்களுக்கு முன்பு அடிதடி மற்றும் கொலை முயற்சி வழக்குகளில் சென்னிமலை தெற்கு தெருவை சேர்ந்த தென்னிமலை ராஜா (வயது 34) என்பவரை கைது செய்தனர். அவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன், மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதனை கலெக்டர் கார்த்திகேயன் ஏற்று, தென்னிமலை ராஜாவை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதற்கான ஆணையை களக்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோசப் ஜெட்சன் நேற்று பாளையங்கோட்டை மத்திய சிறையில் வழங்கினார்.

1 More update

Next Story