வீரபாஞ்சாலி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா


வீரபாஞ்சாலி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
x

திருக்கோவிலூர் அருகே வீரபாஞ்சாலி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடந்தது.

கள்ளக்குறிச்சி

திருக்கோவிலூர்,

திருக்கோவிலூர் அருகே குலதீபமங்கலம் கிராமத்தில் வீரபாஞ்சாலி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதையொட்டி சாமிக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம் உள்பட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சிறப்பு பூஜை செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதையடுத்து கோவில் அருகே அமைக்கப்பட்டிருந்த அக்னி குண்டத்தில் திரளான பக்தர்கள் இறங்கி தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். முன்னதாக மகாபாரத சொற்பொழிவு மற்றும் திருக்கல்யாண நிகழ்ச்சி உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர்கள், உபயதாரர்கள், கிராம முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.


Next Story