திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உண்டியல் காணிக்கை ரூ.2.68 கோடி


திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உண்டியல் காணிக்கை ரூ.2.68 கோடி
x
தினத்தந்தி 17 Dec 2022 12:15 AM IST (Updated: 17 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.2.68 கோடி கிடைத்துள்ளது.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் உண்டியலில் செலுத்தும் காணிக்கை மாதம் இரண்டு முறை எண்ணப்படும். இந்த மாதம் முதல்முறையாக உண்டியல் எண்ணும் பணி கோவில் வளாகத்தில் உள்ள கோவிந்தம்மாள் ஆதித்தனார் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. கோவில் அறங்காவலர் குழு தலைவர் இரா.அருள்முருகன் தலைமையில், இணை ஆணையாளர் கார்த்திக், அறங்காவலர் ராமதாஸ் ஆகியோர் முன்னிலையில் உண்டியல் பணம் எண்ணப்பட்டது.

தூத்துக்குடி உதவி ஆணையர் சங்கர், ஆய்வர்கள் செந்தில்நாயகி, நம்பி, அறங்காவலர் குழு தலைவரின் நேர்முக உதவியாளர் செந்தமிழ் பாண்டியன், பொதுமக்கள் பிரதிநிதிகள் வேலாண்டி, மோகன் மற்றும் சிவகாசி பதினெண் சித்தர் மடம் குருகுல வேதபாடசாலை உழவாரப்பணி குழுவினர், கோவில் பணியாளர்கள் உண்டியல் பணம் எண்ணும் பணியில் ஈடுப்பட்டனர். இதில் மொத்தம் ரூ.2 கோடியே 68 லட்சத்து 90 ஆயிரத்து 642 காணிக்கையாக கிடைத்துள்ளது. மேலும் தங்கம் 1 கிலோ 900 கிராமும், வெள்ளி 18 கிலோ 200 கிராமும், 316 வெளிநாட்டு பணமும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.

1 More update

Next Story