திருவள்ளூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு நவீன வாசிக்கும் கருவிகள் - திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் தகவல்


திருவள்ளூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு நவீன வாசிக்கும் கருவிகள் - திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் தகவல்
x

திருவள்ளூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு நவீன வாசிக்கும் கருவிகள் வழங்கப்பட உள்ளது என்று கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர்

நவீன வாசிக்கும் கருவிகள்

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருவள்ளூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் வாயிலாக 2023 -2024-ம் நிதியாண்டில் உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி மற்றும் கல்லூரிகளில் கல்வி பயிலும் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு தகுதி மற்றும் தேவையின் அடிப்படையில் கீழ்க்கண்ட வசதிகள் கொண்ட நவீன வாசிக்கும் கருவி வழங்கப்பட உள்ளது.

இன்டர்நெட் ரேடியோ, யு.எஸ்.பி. பென் டிரைவ் மற்றும் எஸ்.டி. கார்டு சேமிக்கும் வசதி, தமிழ் உள்பட மற்ற மொழிகளில் படிக்க உதவும் வசதி, நெட்வொர்க் இணைப்பு வை-பை தவிர மொபைல் போனின் ஹாட் ஸ்பாட்டுடன் இணைக்கும் வசதி, டெய்சி புத்தகங்களை பதிவேற்றம் செய்தல், மின் புத்தகங்கள் வீடியோக்கள் ஹாட்ஸ்பாட்டை பயன்படுத்தி நேரடியாக பதிவிறக்கம் செய்தல், குரல் குறிப்புகள் மற்றும் உரை குறிப்புகளை பதிவு செய்யும் வசதி, பார்வையற்றவர்களால் பயன்படுத்த எளிதான தொட்டுணரக்கூடிய பொத்தான்கள், டாக்ஸ், டெய்சி, இ-பப், பி.டி.எப், எச்.டி.எம் போன்றவற்றை எளிதாக படிக்கவும் பேசக்கூடிய மற்றும் தொட்டுணரக்கூடிய பொத்தான்கள்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை

எனவே இந்த திட்டத்தின் கீழ் தகுதியான பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் பயன்பெற ஏதுவாக திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அமைந்துள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணங்களை நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ வழங்க இதன் மூலம் கேட்டுக்கொள்ளப்படுகிறது. இத்தகவலை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள்: மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை அனைத்து பக்கங்கள் நகல், ஆதார் அட்டை நகல் அல்லது குடும்ப அட்டை நகல், பாஸ்போர்ட் புகைப்படம் 3, யு.டி.ஐ.டி ஸ்மார்ட் கார்டு, மருத்துவ சான்று நகல், கல்வி பயிலும் சான்று அசல்.


Next Story