"மேகதாது குறித்து காவிரி மேலாண்மை ஆணையம் எதுவும் விவாதிக்க கூடாது"; பிரதமருக்கு முதல்- அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்


மேகதாது குறித்து காவிரி மேலாண்மை ஆணையம் எதுவும் விவாதிக்க கூடாது; பிரதமருக்கு  முதல்- அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்
x
தினத்தந்தி 13 Jun 2022 12:03 PM GMT (Updated: 13 Jun 2022 12:03 PM GMT)

மேகதாது தொடர்பான எந்த விவாதத்தையும் காவிரி மேலாண்மை ஆணையம் மேற்கொள்ளக் கூடாது என்று பிரதமர் மோடிக்கு முதல்- அமைச்சர்ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

சென்னை,

டெல்லியில் வரும் 17-ஆம் தேதி நடைபெறவுள்ள காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தில், மேகதாது அணைக்கான விரிவான திட்ட அறிக்கைக்கு ஒப்புதல் அளிப்பதா? வேண்டாமா? என்பது குறித்து விவாதிக்கப்படும் என்று ஆணையத் தலைவர் அறிவித்துள்ளார். வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், தமிழக அரசின் எதிர்ப்பை பொருட்படுத்தாமல் ஆணைய தலைவர் இந்த முடிவை எடுத்திருக்கிறார். இதற்கு தமிழகத்தில் இருந்து எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

இந்த நிலையில்,பிரதமருக்கு மு.க ஸ்டாலின் எழுதிய கடிதத்தில், "காவிரி ஆற்றின் குறுக்கே, மேகதாது அணையைக் கட்டுவதற்கு கர்நாடக அரசு மேற்கொள்ளும் முயற்சிகளை எதிர்த்து தமிழ்நாடு அரசால் சுப்ரீம் கோர்ட்டால் தொடரப்பட்டுள்ள வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், மேகதாது அணைத் திட்டத்தின் விரிவான திட்ட அறிக்கை குறித்து எந்த விவாதத்தையும் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மேற்கொள்ளக் கூடாது. இதுதொடர்பாக உரிய அறிவுரைகளை ஒன்றிய ஜல்சக்தி அமைச்சகத்திற்கு வழங்க வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



Next Story