தமிழ்நாட்டில் 3 பேருக்கு கொரோனா


தமிழ்நாட்டில் 3 பேருக்கு கொரோனா
x

தமிழ்நாட்டில் இன்று 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழ்நாட்டில் இன்று 185 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அந்தவகையில், சென்னையில் ஒருவருக்கும், கோவை மாவட்டங்களை சேர்ந்த 2 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதில் ஒரு பெண் மற்றும் 2 ஆண்களுக்கு கொரேனா பாதிப்பு ஏற்பட்டது. இன்று கொரோனா பாதிப்பில் இருந்து ஒருவரும் குணம் அடைந்து வீடு திரும்பவில்லை. மேலும் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 11 ஆக உள்ளது. இதைபோல, இன்று தமிழ்நாட்டில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.

மேற்கண்ட தகவல் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story