தமிழகத்தில் மேலும் 639 பேருக்கு கொரோனா


தமிழகத்தில்  மேலும் 639 பேருக்கு கொரோனா
x

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது.

சென்னை,

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழகத்தில் புதிதாக 639 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 98 பேர், கோவையில் 87 பேர், செங்கல்பட்டில் 50 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆஸ்பத்திரியில் 402 பேர் மட்டும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் 2-வது வாரமாக உயிரிழப்பு இல்லை.

தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்குள்ளாகி 6 ஆயிரத்து 229 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதில் அதிகபட்சமாக சென்னையில் 2 ஆயிரத்து 479 பேரும், கோவையில் 633 பேரும், செங்கல்பட்டில் 371 பேரும் சிகிச்சையில் இருக்கின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story