டி.என்.பி.எஸ்.சி. தேர்வை 460 பேர் எழுதினர்


டி.என்.பி.எஸ்.சி. தேர்வை 460 பேர் எழுதினர்
x

நாகையில் டி.என்.பி.எஸ்.சி. தேர்வை 460 பேர் எழுதினர்.

நாகப்பட்டினம்

வெளிப்பாளையம்:

நாகை இ.ஜி.எஸ் பிள்ளை பொறியியல் கல்லூரியில், டி.என்.பி.எஸ்.சி. மூலம் மூலம் இந்து சமய அறநிலையத் துறை செயல் அலுவலர் பணிக்கான குரூப்-7பி தேர்வு நேற்று நடைபெற்றது. தேர்வை நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது: இந்து சமய அறநிலையத் துறை செயல் அலுவலர் தரம் 3-க்கான குரூப்- 7பி தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வு எழுத நாகை மாவட்டத்தில் 924 பேர் விண்ணப்பம் செய்திருந்தனர். ஆனால் 460 பேர் மட்டுமே நேற்று தேர்வு எழுதினர். 464 பேர் தேர்வு எழுத வரவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story