டி.என்.பி.எஸ்.சி குரூப் 4- தேர்வு முடிவுகள் வெளியீடு


டி.என்.பி.எஸ்.சி குரூப் 4- தேர்வு முடிவுகள் வெளியீடு
x
தினத்தந்தி 24 March 2023 12:07 PM GMT (Updated: 24 March 2023 12:08 PM GMT)

குரூப்-4 பதவிகளில் வரும் காலி பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வு கடந்த ஆண்டு (2022) ஜூலை மாதம் 24-ந்தேதி நடைபெற்றது.

சென்னை,

கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.) உள்பட குரூப்-4 பதவிகளில் வரும் காலி பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வு கடந்த ஆண்டு (2022) ஜூலை மாதம் 24-ந்தேதி நடைபெற்றது. இந்தத் தேர்வை தமிழ்நாடு முழுவதும் 18 லட்சத்து 50 ஆயிரம் பேர் எழுதினர்.

இவர்களுக்கான தேர்வு முடிவு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியிடப்படுவதாக இருந்த நிலையில், தேர்வு முடிவுகள் வெளியாவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து சமூக வலைதளங்களில் தேர்வை எழுதிய தேர்வர்கள் தேர்வு முடிவை வெளியிடக்கோரி கோரிக்கை விடுத்து வந்தனர்.

அதன்படி இந்த மாத இறுதிக்குள் தேர்வு முடிவு வெளியாகும் என்று தேர்வை நடத்திய தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) அறிவித்து இருந்தது. இந்த நிலையில், டி.என்.பி.எஸ்.சி தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதனால், தேர்வர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Next Story