புகையிலை பொருட்கள் விற்றவர் கைது

புகையிலை பொருட்கள் விற்றவர் கைது செய்யப்பட்டனர்.
குளித்தலை அருகே உள்ள பரளி பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக குளித்தலை போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து அங்கு சென்ற குளித்தலை சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமசாமி தலைமையிலான போலீசார் பரளி 4 ரோடு பகுதியில் உள்ள தனது டீக்கடையில் வைத்து புகையிலை பொருட்கள் விற்ற அதே பகுதியை சேர்ந்த மகேந்திரன் (வயது 28) என்பவரை கைது செய்தனர். மேலும், புகையிலை பொருட்கள் விற்றது தொடர்பாக ரகு, ரவிராஜன் ஆகிய 2 பேர் மீது வழக்குப்பதிந்து அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





