புகையிலை பொருட்கள் விற்றவர் கைது

திருக்கோவிலூர் அருகே புகையிலை பொருட்கள் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
திருக்கோவிலூர்
திருக்கோவிலூர் அருகே உள்ள வடக்கு நெமிலி கிராமத்தை சோ்ந்த சரவணன்(வயது 34) என்பவரின் பெட்டிக்கடையில் திருக்கோவிலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மதன்மோகன் தலைமையிலான போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அங்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனைக்காக வைத்திருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து சரவணனை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





