புகையிலை பொருட்கள் விற்றவர் கைது


புகையிலை பொருட்கள் விற்றவர் கைது
x
தினத்தந்தி 1 Oct 2023 6:45 PM GMT (Updated: 1 Oct 2023 6:45 PM GMT)

விழுப்புரத்தில் புகையிலை பொருட்கள் விற்றவர் கைது செய்யப்பட்டார்.

விழுப்புரம்


விழுப்புரம் முத்தாம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் தலைமையிலான போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அங்கு அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக அதே பகுதியை சேர்ந்த ஆனந்தகுமார் (வயது 29) என்பவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்த 14 பாக்கெட் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.


Next Story