புகையிலை பொருட்கள் விற்றவர் கைது

புதுஆயக்குடி பகுதியில் புகையிலை பொருட்களை விற்றவர் கைது செய்யப்பட்டார்.
ஆயக்குடி போலீசார் நேற்று புதுஆயக்குடி பகுதியில் உள்ள பெட்டிக்கடைகளில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அங்குள்ள பஸ் நிறுத்தம் பகுதியில் சாகுல் ஹமீது (வயது 45) என்பவர் தனது பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து சாகுல்ஹமீதை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





