புகையிலை விற்றவர் கைது


புகையிலை விற்றவர் கைது
x

சுத்தமல்லியில் புகையிலை விற்றவரை போலீசார் கைது செய்தனர்.

திருநெல்வேலி

பேட்டை:

சுத்தமல்லி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகபெருமாள் மற்றும் போலீசார் சுத்தமல்லி மேலத்தெரு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் உள்ள ஒரு கடையில் சோதனை நடத்தியபோது, தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகள் விற்றது தெரியவந்தது. இதுதொடர்பாக சுப்புக்குட்டி மகன் முருகன் என்பவரை கைது செய்து 8 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.


Next Story