புகையிலை விற்றவர் கைது


புகையிலை விற்றவர் கைது
x
தினத்தந்தி 15 Oct 2022 6:45 PM GMT (Updated: 15 Oct 2022 6:47 PM GMT)

சுரண்டை அருகே புகையிலை பொருட்கள் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.

தென்காசி

சுரண்டை:

சுரண்டை அருகே வீரகேரளம்புதூர் பகுதியில் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் அன்னலட்சுமி தலைமையில் போலீசார் வீரகேரளம்புதூர் நவநீதகிருஷ்ணன் கோவில் தெருவில் கண்ணன் (வயது 38) என்பவரது கடையில் சோதனை நடத்தினர். அப்போது புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் இருந்து 175 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து வீரகேரளம்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.


Next Story