புகையிலை விற்றவர் கைது


புகையிலை விற்றவர் கைது
x
தினத்தந்தி 2 Jun 2023 12:15 AM IST (Updated: 2 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மணல்மேடு கடைவீதியில் புகையிலை விற்றவர் கைது

மயிலாடுதுறை

மணல்மேடு:

மயிலாடுதுறை மாவட்டத்தில் புகையிலை விற்பனை, போலி மதுபானம் விற்பனை உள்ளிட்ட விற்பனையை தடுக்கும் வகையில் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன்படி மணல்மேடு கடைவீதியில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அங்குள்ள ஒரு கூல்டிரிங்ஸ் கடையில் சோதனை செய்தபோது அந்த கடையில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த மணல்மேடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தன் மற்றும் போலீசார் கூல்டிரிங்ஸ் கடையை நடத்தி வந்த கடலங்குடி பள்ளிவாசல் தெருவை சேர்ந்த அப்துல்கலில் (வயது 62) என்பவரை கைது செய்தனர்.

1 More update

Next Story