திருக்கோவிலூரில் புகையிலை பொருட்கள் விற்றவர் கைது


திருக்கோவிலூரில் புகையிலை பொருட்கள் விற்றவர் கைது
x
தினத்தந்தி 9 Oct 2023 6:45 PM GMT (Updated: 9 Oct 2023 6:46 PM GMT)

திருக்கோவிலூரில் புகையிலை பொருட்கள் விற்றவர் கைது செய்யப்பட்டாா்.

கள்ளக்குறிச்சி

திருக்கோவிலூர்,

திருக்கோவிலூர் பகுதியில் உள்ள கடையில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் திருக்கோவிலூர் போலீசார் அப்பகுதியில் உள்ள கடைகளில் சோதனை நடத்தினர். அதில் திருக்கோவிலூர் லாலாதோப்பு தெரு பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வரும் செல்வம்(வயது 62) என்பவர் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து செல்வத்தை கைது செய்த போலீசார், கடையில் இருந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.


Next Story