ராணிப்பேட்டை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை


ராணிப்பேட்டை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
x

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (புதன்கிழமை) ஆடி கிருத்திகையை முன்னிட்டு, பள்ளி, கல்லூரிகளுக்கு ஒருநாள் விடுமுறை அளித்து கலெக்டர் வளர்மதி உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் வருகிற 12-ந் தேதி (சனிக்கிழமை) அன்று அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் செயல்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

ஆடி கிருத்திகையையொட்டி மாவட்டத்தில் உள்ள ரத்தினகிரி பாலமுருகன் கோவில் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணி முருகன் கோவில் மற்றும் இதர முருகன் கோவில்களுக்கு பக்தர்கள், பொதுமக்கள் அதிகளவில் காவடி எடுத்து பஸ்களில் சென்று வருவார்கள்.

இதனால் பஸ்களை பயன்படுத்தி பள்ளி, கல்லூரிகளுக்கு வரும் மாணவ- மாணவிகளுக்கு சிரமம் ஏற்படும். அதனை கருத்தில் கொண்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் வளர்மதி தெரிவித்துள்ளார்.


Next Story