இன்று ஆடி 1-ந் தேதி: ஈரோட்டில் தேங்காய் சுடும் பண்டிகை கோலாகலம்


இன்று ஆடி 1-ந் தேதி: ஈரோட்டில் தேங்காய் சுடும் பண்டிகை கோலாகலம்
x

Today is the 1st of Adi: coconut roasting festival in Erode

ஈரோடு

ஆடி 1-ந் தேதியையொட்டி இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஈரோட்டில் தேங்காய் சுடும் பண்டிகை கோலாகலமாக நடக்கிறது.

தேங்காய் சுடும் பண்டிகை

தமிழ்நாட்டில் ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு முக்கியமான பண்டிகை உண்டு. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் ஆடி மாதத்துக்கு என்று சிறப்பு உண்டு. ஆடிப்பெருக்கு விழாவை மிகவும் உற்சாகமாக கொண்டாடுவதும், ஆடி அமாவாசை தினத்தில் மூதாதையரை நினைத்து திதி- தர்ப்பணங்கள் செய்வதும் பல ஆண்டுகளாக தொடர்ந்து வரும் நிகழ்வாகும். அதுபோன்று ஆடி மாதம் பிறக்கும் முதல் நாளான 1-ந் தேதி தேங்காய் சுடும் பண்டிகை ஈரோட்டில் ஆண்டு தோறும் உற்சாகமாக கொண்டாடப்படுவது வழக்கம்.ஆடி 1-ந் தேதி மாலையில் பெண்கள் தங்கள் வீடுகளின் முன்பு நெருப்பு பற்ற வைத்து, தேங்காய் சுடுவார்கள். தேங்காய் சுடுவதற்கு முன்பாக அதை இளங்காயாக தேர்ந்து எடுத்து தயார் செய்வார்கள். தேங்காயின் ஒரு கண்ணை உடைத்து தண்ணீரை வெளியே எடுத்து விட்டு, அதன் உள்ளே வெல்லம், பருப்பு, அவல், பச்சரிசி போட்டு கண் வழியாக தேங்காய் சுடுவதற்கான குச்சியை பொருத்தி, தீயில் சுட்டு எடுப்பார்கள்.

குச்சி விற்பனை

தேங்காய் சுடப்பட்டு நன்கு வெந்ததும், தேங்காய் ஓட்டினை உடைத்து, சாமிக்கு படையல் இட்டு பூஜை செய்து, அனைவரும் பகிர்ந்து சாப்பிடுவார்கள்.மகாபாரத போர் ஆடி மாதம் 1-ந் தேதி தொடங்கி 18-ந் தேதி முடிந்ததாக நம்பப்படுகிறது. பாரதப்போர் தொடங்கிய ஆடி மாதம் முதல் நாள் பாண்டவர்கள் போரில் வெற்றி பெற வேண்டி பொதுமக்கள் ஆடி1-ந் தேதி தேங்காய் சுட்டு சாமிக்கு படைத்து பூஜை செய்ததை நினைவுகூரும் வகையில் செய்யப்பட்ட நிகழ்வு தொடர்ந்து வருவதாக கூறப்படுகிறது.ஈரோட்டில் இந்த பண்டிகை பொதுமக்களால் உற்சாகமாகவும், மகிழ்ச்சியாகவும் கொண்டாடப்படுகிறது. இதற்காக தேங்காய் சுடும் குச்சிகள், ஈரோட்டில் பல்வேறு பகுதிகளிலும் விற்பனை செய்யப்படுகிறது.

1 More update

Next Story