நாகர்கோவிலில் தக்காளி விலை சற்று குறைந்தது; கிலோ ரூ.100-க்கு விற்பனை


நாகர்கோவிலில் தக்காளி விலை சற்று குறைந்தது; கிலோ ரூ.100-க்கு விற்பனை
x

குமரி மாவட்டத்தில் ஏறுமுகமாக இருந்து வந்த தக்காளி விலை நேற்று சற்று குறைந்தது. நாகர்கோவிலில் கிலோ ரூ.100-க்கு விற்பனையானது.

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் ஏறுமுகமாக இருந்து வந்த தக்காளி விலை நேற்று சற்று குறைந்தது. நாகர்கோவிலில் கிலோ ரூ.100-க்கு விற்பனையானது.

அதிகரித்த தக்காளி விலை

தமிழகத்தில் கடந்த 2 வாரங்களாக அத்தியாவசிய தேவையான காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது. இதில் காய்கறிகள் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே இருக்கிறது. அதிலும் சமையலுக்கு முக்கிய தேவையான தக்காளி, இஞ்சி உள்ளிட்டவை தங்கத்தின் விலையை போல தினமும் அதிகரித்து வருகிறது.

குமரி மாவட்ட மொத்த மார்க்கெட்டுகளில் கடந்த மாதம் தொடக்கத்தில் ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ தக்காளி திடீரென விலை உயர்ந்தது. ஜூலை மாதம் தொடக்கத்தில் இருந்து ஒரு கிலோ தக்காளி ரூ.130 வரை விற்பனை செய்யப்பட்டது.

ரூ.100-க்கு விற்பனை

நேற்றுமுன்தினம் ஒரு கிலோ தக்காளி ரூ.130-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் நேற்று ரூ.30 குறைந்து ரூ.100-க்கு விற்பனையானது. அதேசமயம் சில சில்லரை கடைகளில் ரூ.110-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இதேபோல பீன்ஸ் கிலோ ரூ.130-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் நேற்று ரூ.100-ஆக குறைந்துள்ளது. கேரட் கிலோ ரூ.90-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் ரூ.80-ஆக குறைந்துள்ளது. இதேபோல மற்ற சில காய்கறிகளின் விலையில் ஏற்றமும், இறக்கமும் இருந்தது.

அதேசமயம் ஒரு கிலோ இஞ்சி நேற்றுமுன்தினம் வரை ரூ.240-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், நேற்று ரூ.280-க்காக அதிகரித்தது.

தக்காளி விலை உயர்வால், ஓட்டல்களிலும் தக்காளியை குறைவான அளவே வாங்கி உபயோகிக்கும் நிலை உள்ளது.

காய்கறி விலை நிலவரம்

நாகர்கோவில் அப்டா மார்க்கெட்டில் விற்பனையான காய்கறிகளின் நேற்றைய விலை விவரம் (ஒரு கிலோ) வருமாறு:-

உருளைகிழங்கு- ரூ.30, பல்லாரி- ரூ.25, வெங்காயம்- ரூ.130, தடியங்காய்- ரூ.25, புடலங்காய்- ரூ.40, வெள்ளரிக்காய்- ரூ.35, பீட்ரூட்- ரூ.25, சேனைக்கிழங்கு- 55, நாட்டு கத்திரிக்காய்- ரூ.70, வாி கத்திரிக்காய்- ரூ.35, வழுதலங்காய்- ரூ.50, முட்டைக்கோஸ்- ரூ.35, இஞ்சி- ரூ.280 -க்கு விற்பனை செய்யப்பட்டது. காய்கறிகளின் விலை தற்போது சற்று குறைந்துள்ளதால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Next Story