சென்னையில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை


சென்னையில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை
x

தொடர் கனமழை காரணமாக சென்னையில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நாளை(15.11.2023) மட்டும் விடுமுறை என மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை,

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக 16-ம் தேதி வாக்கில் நிலவக்கூடும். இதன் காரணமாக இன்று தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .

மேலும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும். அவ்வப்போது ஒரு சில இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

தொடர்ந்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது . இந்த நிலையில் தொடர் கனமழை காரணமாக சென்னையில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நாளை(15.11.2023) விடுமுறை என மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்


Next Story