வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நாளை கடைசி நாள் - சத்யபிரதா சாகு


வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நாளை கடைசி நாள் - சத்யபிரதா சாகு
x
தினத்தந்தி 16 March 2024 1:12 PM GMT (Updated: 16 March 2024 2:23 PM GMT)

தமிழ்நாட்டில் முதற்கட்டமாக ஒரே கட்டத்தில் ஏப்ரல் மாதம் 19ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது

சென்னை,

நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 19ம் தேதி தொடங்கி, ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது.இதற்கிடையே, தமிழ்நாட்டில் முதற்கட்டமாக ஒரே கட்டத்தில் ஏப்ரல் மாதம் 19ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.விளவங்கோடு தொகுதி இடைத்தேர்தலும் அன்றே நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,

தமிழகத்தில் விளவங்கோடு தொகுதிக்கு மட்டுமே இடைத்தேர்தல் நடைபெறுகிறது.பொன்முடி, சட்டமன்ற உறுப்பினராக தொடர்வதால், திருக்கோவிலூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் கிடையாது.

வாக்களர் பட்டியலில் பெயர் சேர்க்க வாய்ப்புள்ளது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நாளையே (மார்ச் 17) கடைசி நாள்; 18 வயது நிறைவடைந்தவர்கள் நாளைக்குள் விண்ணப்பிக்க வேண்டும்

வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை என்றால் தற்போது கூட விண்ணப்பிக்கலாம். வயதானவர்கள் வீட்டிலிருந்தே வாக்களிக்கலாம். 12டி விண்ணப்பத்தை பயன்படுத்த வேண்டும். இப்தார் நிகழ்ச்சியில் அரசியல் தலைவர்கள் பங்கேற்கலாம். ஆனால், வாக்கு சேகரிக்க கூடாது. தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்துள்ளது. அதனால், ரூ.50 ஆயிரம் பணம் மட்டுமே கையில் எடுத்துச் செல்லலாம்.அரசாணை எதுவும் இனிமேல் வெளியிட கூடாது. பொன்முடி பதவி ஏற்பு தொடர்பாக தேர்தல் ஆணையத்தை அணுகி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story