சேமங்கலம், புதுக்கருவாட்சி பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்


சேமங்கலம், புதுக்கருவாட்சி பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்
x
தினத்தந்தி 5 Oct 2023 6:45 PM GMT (Updated: 5 Oct 2023 6:45 PM GMT)

சேமங்கலம், புதுக்கருவாட்சி பகுதிகளில் நாளை மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.

விழுப்புரம்


அரசூர் துணை மின் நிலையத்திற்குட்பட்ட சேமங்கலம் மின்னூட்டியில் நாளை (சனிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மேல்தணியாலம்பட்டு, கீழ்தணியாலம்பட்டு, காரப்பட்டு, சேமங்கலம் ஆகிய இடங்களில் மின்சார வினியோகம் இருக்காது.

இதேபோல் கஞ்சனூர் துணை மின் நிலையத்திற்குட்பட்ட புதுக்கருவாட்சி மின்னூட்டியில் நடைபெறும் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கொரலூர், மேல்காரணை, கல்யாணம்பூண்டி, நங்காத்தூர், சங்கீதமங்கலம், சாலவனூர், பனமலைப்பேட்டை, சி.என்.பாளையம், வெள்ளையாம்பட்டு, புதுக்கருவாட்சி, பழையகருவாட்சி ஆகிய இடங்களில் மின்சார வினியோகம் இருக்காது. இந்த தகவலை விழுப்புரம் மின்வாரிய செயற்பொறியாளர் செந்தில்நாதன் தெரிவித்துள்ளார்.


Next Story