மணிமுத்தாறு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி...!


மணிமுத்தாறு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி...!
x

வெள்ளப்பெருக்கு குறைந்ததை தொடர்ந்து மீண்டும் மணிமுத்தாறு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

திருநெல்வேலி


நெல்லை மாவட்டம் அம்பை அருகே மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் மிகவும் பிரசித்திபெற்ற மணிமுத்தாறு அருவி உள்ளது. இங்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்து குளித்து மகிழ்ந்து செல்வர்.

இந்த நிலையில் மணிமுத்தாறு அருவிக்கு மேலே உள்ள மாஞ்சோலை, ஊத்து உள்ளிட்ட மலைப்பிரதேச பகுதியில் கடந்த மூன்று நாட்கள் தொடர்மழை பெய்ததால் மணிமுத்தாறு அருவிக்கான நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிப்பதற்கு வனத்துறையினர் தடை விதித்திருந்தனர்.

இந்த நிலையில் இன்று மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்த்தையொட்டி சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு மீண்டும் அனுமதி அளிக்கப்பட்டது. ஏற்கனவே இன்று விடுமுறை நாள் என்பதாலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் மணிமுத்தாறு அருவியில் குவிந்தனர்.


Next Story