குற்றாலம் ஐந்தருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி


குற்றாலம் ஐந்தருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி
x
தினத்தந்தி 20 Dec 2023 1:30 AM GMT (Updated: 20 Dec 2023 1:46 AM GMT)

வெள்ளப்பெருக்கு காரணமாக குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.

தென்காசி,

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கடந்த 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் பெய்த கனமழையால் அம்மாவட்டங்கள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளன. கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குடியிருப்பு பகுதிகளுக்குள் தண்ணீர் புகுந்ததால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

இதனிடையே கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் 3 நாட்களுக்குப் பின்னர் வெள்ளப்பெருக்கு குறைந்ததையடுத்து ஐந்தருவியில் மட்டும் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


Next Story