தக்கலை அருகே லாரி மோதி வியாபாரி பலி


தக்கலை அருகே லாரி மோதி வியாபாரி பலி
x

தக்கலை அருகே லாரி மோதி வியாபாரி பலியானார்.

கன்னியாகுமரி

தக்கலை:

தக்கலை அருகே உள்ள கல்லக்குழி, நாராயணத்துவிளையை ேசர்ந்தவர் ஜஸ்டின் அருள்தாஸ் (வயது55), வியாபாரி. இவர் அந்த பகுதியில் பலசரக்கு கடை நடத்தி வந்தார். நேற்று மதியம் 2.30 மணிக்கு வேர்க்கிளம்பிக்கு செல்வதற்காக ஸ்கூட்டரில் புறப்பட்டார். முண்டவிளை பகுதியில் வந்த போது பின்னால் ஜல்லி ஏற்றி வந்து கொண்டிருந்த டிப்பர் லாரி, ஸ்கூட்டரை முந்தி சென்ற போது மோதியது. இதில் ஜஸ்டின் அருள்தாஸ் நிலைதடுமாறி சாலையில் விழுந்தார். அப்போது லாரியின் பின்பக்க சக்கரம் அவரது தலையில் ஏறி இறங்கியது. இதில் அவர் சம்பவ இடத்தில் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த கொற்றிக்கோடு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய லாரி டிரைவரை ேதடி வருகிறார்கள். விபத்தில் பலியான ஜெஸ்டின் அருள்தாசுக்கு புஷ்பராணி என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். மகன், மகள் இருவருக்கும் திருமணமாகி விட்டது.


Next Story