ஆன்லைன் ரம்மியால் தொடரும் சோகம் - தமிழகத்தில் மேலும் ஒருவர் தற்கொலை..!


ஆன்லைன் ரம்மியால் தொடரும் சோகம் - தமிழகத்தில் மேலும் ஒருவர் தற்கொலை..!
x

ஆன்லைன் சூதாட்ட விளையாட்டால் தமிழகத்தில் மேலும் ஒருவர் தற்கொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி,

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தால் 40-க்கும் மேற்பட்டவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இவ்வாறு தொடர்ந்து பல உயிர்களை பலி வாங்கி வரும் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய பல தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் தமிழக சட்டசபையில் மீண்டும் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா தாக்கல் செய்யப்பட்டு, கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், திருச்சியில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டால் மேலும் ஒருவர் தற்கொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே அஞ்சல்காரன்பட்டியை சேர்ந்த வில்சன் (26) என்பவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

ஆன்லைன் ரம்மியால் சுமார் ரூ.4 லட்சத்தை இழந்ததால் கூலிதொழிலாளி வில்சன் தற்கொலை செய்து கொண்டாதாக போலீசார் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது. பின்னர் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏற்கனவே திருச்சியில் லூடோ விளையாட்டால் ஒருவர் இறந்த நிலையில் ஆன்லைன் ரம்மியால் மேலும் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Next Story