சக்கரத்தில் சேலை சிக்கியதால் விபரீதம்; மகனுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் பலி


சக்கரத்தில் சேலை சிக்கியதால் விபரீதம்; மகனுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் பலி
x

திசையன்விளை அருகே, மகனுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணின் சேலை சக்கரத்தில் சிக்கியதால் விபத்து ஏற்பட்டு அந்த பெண் பரிதாபமாக இறந்தார்.

திருநெல்வேலி

திசையன்விளை:

பணகுடி அருகே உள்ள தளவாய்புரம் கட்டபொம்மன் தெருவை சேர்ந்தவர் வேலு. இவருடைய மனைவி இசக்கியம்மாள் (வயது 65) இவர் தனது கையில் ஏற்பட்ட காயத்துக்கு சிகிச்சை பெறுவதற்காக மகன் பாலகிருஷ்ணனுடன் மோட்டார் சைக்கிளில் திசையன்விளைக்கு சென்றார். அங்கு இசக்கியம்மாளின் கையில் வைத்தியர் கட்டு ேபாட்டதும், தாய், மகன் இருவரும் மோட்டார் சைக்கிளில் ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். வாழை தோட்டம் விலக்கு அருகே சென்றபோது இசக்கியம்மாளின் சேலை எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளின் பின்பக்க சக்கரத்தில் சிக்கியது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த அவர் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து திசையன்விளை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story