ஓடும் பஸ்சில் ஏற முயன்றபோது பரிதாபம்: பஸ் சக்கரத்தில் சிக்கி கல்லூரி மாணவர் பலி


ஓடும் பஸ்சில் ஏற முயன்றபோது பரிதாபம்: பஸ் சக்கரத்தில் சிக்கி கல்லூரி மாணவர் பலி
x

கோயம்பேடு 100 சாலையில் ஓடும் பஸ்சில் ஏற முயன்றபோது பஸ் சக்கரத்தில் சிக்கி கல்லூரி மாணவர் பலியானார்.

சென்னை

சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் சூர்யா (வயது 19). இவர், கோயம்பேட்டில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் 2-ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம் மாலை கல்லூரி முடிந்து வீட்டுக்கு செல்ல முயன்றார்.

இதற்காக கோயம்பேடு 100 சாலையில் வந்த தங்கசாலை செல்லும் மாநகர பஸ்சில் (தடம் எண் 48 சி) ஏற முயன்றார். ஓடும் பஸ்சின் முன்பகுதி படிக்கட்டில் அவர் ஏற முயன்றபோது, கால் தவறி கீழே விழுந்தார்.அப்போது அதே பஸ்சின் பின்பக்க சக்கரம் அவரது உடலின் இடுப்பு பகுதியில் ஏறி இறங்கியது. இதில் படுகாயமடைந்த சூர்யாவை, சக மாணவர்கள் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சூர்யா நள்ளிரவில் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து பலியான சூர்யா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்துக்கு காரணமான மாநகர பஸ் டிரைவர் வெங்கடேசன் (57) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story