விவசாயிகளுக்கு பயிற்சி


விவசாயிகளுக்கு பயிற்சி
x
தினத்தந்தி 5 Aug 2023 7:00 PM GMT (Updated: 5 Aug 2023 7:00 PM GMT)

விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

தென்காசி

கடையம்:

தென்காசி மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குனர் ஜெயபாரதி மாலதி அறிவுரைப்படி கடையம் வட்டாரம் 2023-24 கலைஞரின் திட்ட கிராமமான திருமலைப்பபுரத்தில் விவசாயிகள் மற்றும் அப்பகுதி மகளிர்களுக்கு மாடித்தோட்டம் அமைத்தல் மற்றும் பராமரித்தல் பயிற்சி அளிக்கப்பட்டது.

முன்னணி வீட்டுத்தோட்டம் செய்பவரான செல்வி ரூபா தேவி, சிவசுப்பிரமணியன் ஆகியோர் கலந்துகொண்டு மாடித்தோட்டத்தை பற்றி செயல்முறை விளக்கம் அளித்தனர். மேலும் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் ஞானசேகரன் திட்ட விளக்கவுரை மற்றும் சிறப்புரை ஆற்றினார். வட்டார தோட்டக்கலை அலுவலர் ஷபா பாத்திமா, உதவி தோட்டக்கலை அலுவலர்கள் பானுமதி, இசக்கியம்மாள் உள்ளிட்டோர் பயிற்சியில் கலந்து கொண்டனர்.


Next Story