ஆசிரியர்களுக்கு பயிற்சி


ஆசிரியர்களுக்கு பயிற்சி
x
தினத்தந்தி 28 April 2023 6:45 PM GMT (Updated: 28 April 2023 6:46 PM GMT)

சங்கராபுரத்தில் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

சங்கராபுரம்:

சங்கராபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட அரசு மற்றும் உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளியில் பணிபுரியும் 1 முதல் 3-ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு எண்ணும்-எழுத்தும் முதல் பருவ பயிற்சி சங்கராபுரம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சரஸ்வதி தலைமை தாங்கினார். மாவட்ட கல்வி அலுவலர் ராஜூ, மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் பழனியாப்பிள்ளை, பள்ளி தலைமை ஆசிரியர் சீனுவாசன், வட்டார கல்வி அலுவலர்கள் அண்ணாதுரை, தஸ்பிகா, ராஜசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார வள மைய மேற்பார்வையாளர் கவிதா வரவேற்றார். இதில் தமிழ், ஆங்கிலம், கணக்கு ஆகிய 3 பாடத்தை மாணவர்களுக்கு கற்பிக்கும் முறை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. இதை பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர் பொன்குமார் ஆய்வு செய்தார். இதில் ஒருங்கிணைப்பாளர் பால்ராஜ், ஆசிரியர்கள், பயிற்றுனர்கள் கலந்து கொண்டனர். இதில் 184 ஆசிரியர்கள் பயிற்சி பெற்றனர்.


Next Story