திமுக எம்.பி. திருச்சி சிவா மகன் சூர்யா கைது..!


திமுக எம்.பி. திருச்சி சிவா மகன் சூர்யா கைது..!
x

திமுக எம்.பி. திருச்சி சிவாவின் மகன் சூர்யாவை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி,

திமுக எம்.பி. திருச்சி சிவாவின் மகன் சூர்யாவை போலீசார் கைது செய்துள்ளனர். தற்போது சூர்யா பா.ஜ.க.வின் ஓபிசி பிரிவு பொது செயலாளராக உள்ளார்.

கடந்த 11ம் தேதி சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், சூர்யாவின் கார் மீது தனியார் ஆம்னி பஸ் மோதி விபத்து ஏற்படுத்தியது. அப்போது, பஸ் மோதியதில் தனது காருக்கு சேதம் என கூறி டிரைவரை மிரட்டி பஸ்சை எடுத்து சென்று பணம் கேட்டு மிரட்டியதாக சூர்யா மீது அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் திருச்சி கண்டோன்மென்ட் போலீசார் சூர்யாவை கைது செய்தனர்.


கைதான சூர்யாவை சற்று நேரத்தில் நீதிபதி முன் ஆஜர் படுத்த காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.


Next Story