திருச்சி: இரு லாரிகள் நேருக்கு நேர் மோதி தீப்பிடித்து விபத்து - 2 பேர் பலி


திருச்சி: இரு லாரிகள் நேருக்கு நேர் மோதி தீப்பிடித்து விபத்து - 2 பேர் பலி
x
தினத்தந்தி 11 Aug 2022 2:41 AM GMT (Updated: 11 Aug 2022 2:50 AM GMT)

திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு லாரிகள் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

மணப்பாறை,

திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அருகே உள்ள திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு லாரிகள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

அரியலூரில் இருந்து சிமெண்ட் ஏற்றி வந்த லாரியும், தூத்துக்குடியில் இருந்து காற்றாலை ஏற்றி வந்த லாரியும் திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் போட்டி போட்டுக்கொண்டு சென்றுள்ளன.

அப்போது கண்டெய்னர் லாரி சாலையில் சென்று கொண்டிருந்த சிமெண்ட் லாரி மீது மோதியது. இதில் 2 லாரிகளும் தீப்பிடித்து எரிந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த விபத்தில் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த லாரி டிரைவர் மணிபால் மற்றும் கீளினர் பவன்பட்டேல் ஆகியோர் உயிரிழந்துள்ளர். இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் சிறிது போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story