மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்; வாலிபர் பலி


மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்; வாலிபர் பலி
x

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

விழுப்புரம்

திண்டிவனம்,

திண்டிவனம் அடுத்த கொள்ளார் கிராமத்தை சேர்ந்தவர் அஜித் (வயது 27). இவர் திண்டிவனம்-செஞ்சி சாலை பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த லாரி அஜித் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த அஜித் சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் ரோசனை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Related Tags :
Next Story