லாரி டிரைவர்கள் வேலை நிறுத்தம்


லாரி டிரைவர்கள் வேலை நிறுத்தம்
x
தினத்தந்தி 3 Aug 2023 12:30 AM IST (Updated: 3 Aug 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

கடையம் அருகே லாரி டிரைவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

தென்காசி

கடையம்:

கடையம் அருகே உள்ள ஆசிர்வாதபுரம், மாதாபுரம் பகுதியை சேர்ந்த லாரி டிரைவர்கள் நேற்று திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதில் 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், இந்த கிராமத்தில் பிரதான தொழிலாக செங்கல் தயாரிக்கும் தொழில் நடைபெற்று வருகிறது. இங்கு தயாரிக்கப்படும் செங்கல், எம்.சாண்ட், ஜல்லி உள்ளிட்ட கட்டுமான மூலப்பொருட்கள் தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு வாகனங்களில் எடுத்து செல்கிறோம். அவ்வாறு கட்டுமான பொருட்களை எடுத்துச் செல்லும் போது, தென்காசி மாவட்ட போலீசார் அபராதம் என்கிற பெயரில் அடிக்கடி வாகனங்களை மறித்து வசூல் செய்கிறார்கள். இதனால் எங்கள் வாழ்வாதாரத்தை இழந்து வருகிறோம் என்றனர்.

1 More update

Next Story