காற்றாலை விசிறி இறக்கையை லாரியில் ஏற்றி செல்வதால் போக்குவரத்து பாதிப்பு


காற்றாலை விசிறி இறக்கையை லாரியில் ஏற்றி செல்வதால் போக்குவரத்து பாதிப்பு
x

காற்றாலை விசிறி இறக்கையை லாரியில் ஏற்றி செல்வதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.

கரூர்

பெங்களூருவில் இருந்து மதுரைக்கு சுமார் 400 அடி நீள காற்றாலை விசிறியின் இறக்கை லாரியில் ஏற்றிக்கொண்டு செல்லப்பட்டது. இந்த லாரி கரூர் மாவட்டம் தவுட்டுப்பாளையம் போலீஸ் சோதனைச்சாவடி அருகே வந்தபோது லாரி திரும்ப முடியாமல் நீண்ட நேரம் நின்றது. இதன் காரணமாக தவுட்டுப்பாளையத்தில் சேலம்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சர்வீஸ் சாலையில் அரசு மற்றும் தனியார் பஸ்கள், லாரிகள், கார்கள், வேன்கள் உள்ளிட்ட வாகனங்கள் நீண்ட நேரம் அணிவகுத்து நின்றன. பின்னர் அந்த லாரி மிகவும் மெதுவாக வளைந்து நெளிந்து சென்றது. இதனால் தவுட்டுப்பாளையம் காவிரி ஆற்று பாலம் முதல் பாலத்துறை வரை ஏராளமான வாகனங்கள் லாரியின் பின்னால் அணிவகுத்து சென்றன. இதனால் சுமார் அரை மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். எனவே காற்றாலை இறக்கைகளை கொண்டு செல்லும் லாரிகள் இரவு 10 மணிக்கு மேல் தேசிய நெடுஞ்சாலையில் செல்ல தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர்.

1 More update

Next Story